states

img

ஆந்திராவில் டிச. 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட  நாளாக உள்ள நிலையில், ஒன்றிய மோடி அரசு  சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்கி வருகிறது. இந்நிலையில், பீகாரில் முதல்வா் நிதிஷ் குமார் தலைமை யிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிவு களையும் வெளியிட்டு ஒன்றிய மோடி அரசுக்கு அதிர்ச்சி வைத்தி யம் அளித்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து பீகார்  நீதிமன்ற படிகளில் ஏறிக்கொண்டி ருக்கிறது. இந்நிலையில், பீகாரை போன்று நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஒன்றிய பாஜக அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி வெளிப்படையாக அறிவித்துவிட்டார். 

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் ஆளும் ஆந்திர மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன் சமீபத்தில் அறி வித்தார். தொடர்ந்து அமைச்சர வை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிசம்பர் 9 முதல் ஆந்திராவில் விரிவான சாதி வாரி கணக்கெடுப்புப் பணி தொட ங்கும் என அம்மாநில செய்தி தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிரு ஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாநிலத்தில் 2 நாள்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது